ஹக்கீமின் மீது அதிருப்தி – விரைவில் புதிய கட்சி அமைச்சர் சேகு இஸ்ஸதீன்

358 0

segu-21-720x480அமைச்சர் ரவூப் ஹக்கீமின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள தாம் விரைவில் புதிய கட்சி ஒன்றை பதிவுசெய்ய எதிர்ப்பார்த்திருப்பதாக முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார்.
கிழக்கின் எழுச்சி என்ற பெயரில் ஹக்கீமின் அதிருப்தியாளர்கள் தற்போது செயற்பட்டு வருகின்றனர்.
இது தனியாக முஸ்லிம்களின் அபிலாசைகளை நோக்காகக்கொண்டு இயங்கும் கட்சியாக இருக்கும் என்று சேகு இஸ்ஸதீன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஹக்கீமின் கொள்கையுடன் முரண்படும் பலர் புதிய அரசியல் முன்னணியில் இணைந்துக்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தமது அரசியலை தனிப்பட்ட வாழ்க்கைக்காக பயன்படுத்திவருகிறார்.
முஸ்லிம்களுக்காக குறிப்பாக கிழக்கின் முஸ்லிம்களின் நலன்களை அவர் புறந்தள்ளிவருகிறார் என்றும் இஸ்ஸதீன் குற்றம் சுமத்தியுள்ளார்.