வஸிம் தாஜுதீன் கொலை – குடும்பத்தினர் எச்சரிக்கை

405 0

va-1ரக்பி வீரர் வஸிம் தாஜுதீனின் கொலை தொடர்பான விசாரணைகள் மறைப்படுமானால் அதற்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடப்போவதாக தாஜதீனின் குடும்பத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்திளை வெளியிட்டுள்ளது.
நடைமுறையில் இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றபோதும் ஏனைய விசாரணைகளை போன்று தேக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் தமக்கு ஏற்பட்டுள்ளதாக தாஜூதீனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அரசியல் அழுத்தங்கள் காரணமாக இந்த விசாரணைகள் பின் தள்ளப்படக்கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் தாஜூதீனின் கொலை தொடர்பில் நீதி நிலைநாட்டப்படாது போனால் தாம் வீதியில் இறங்கிப்போராடப்போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.