நிதிமோசடி குறித்து விசாரிக்கும் தரப்பினருக்கு நெருக்கடி

440 0

FCID-720x480இலங்கையின் உயர் தரப்பினர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிதிமோசடி காவல்துறை பிரிவினர், 62 விசாரணைகள் தொடர்பில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணைகளுக்காக வெளிநாடுகளின் நிதிநிறுவனங்களிடம் இருந்து தகவல்களை எதிர்ப்பார்த்தபோதும் இன்னும் அந்த தகவல்கள் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் எதிர்நோக்கப்படுவதாக நிதிமோசடி தடுப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாடுகளுக்கு நாடு சட்டங்களும் நிர்வாகங்களும் வித்தியாசப்படுகின்ற நிலையிலேயே இந்த தகவல் பரிமாற்றங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
அரசாங்கத்தை பொறுத்தவரை விசாரணைகளை துரிதப்படுத்துமாறு நிதிமோசடி பிரிவினருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
எனினும் அரசாங்கம் எதிர்ப்பார்க்கும் விசாரணைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களில் 90 வீதமான தொடர்புகள் வெளிநாடுகளின் நிதிநிறுவனங்களுடன் தொடர்புப்பட்டுள்ளன
எனவேதான் தமது விசாரணைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நிதிமோசடி பிரிவு தெரிவித்துள்ளது.