சோமாலிய கடற்கொள்ளையர் பிடியிலுள்ள இலங்கையர்கள் கடற்றொழில் அமைச்சுடன் தொடர்பு கொள்ள அனுமதி!

64 0

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட ஆறு இலங்கை மீனவர்களையும் மீட்பதற்கு  இந்தியா உதவுவதாக உறுதியளித்துள்ளதாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் கயான் விக்கிரமசூரிய இன்று   (28) தெரிவித்தார்.

இதேவேளை, சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்ட மீனவர்களை கடற்றொழில் அமைச்சுடன் தொடர்பு கொள்ள கடற்கொள்ளையர்கள் அனுமதித்துள்ளதாக மீன்பிடி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த  தெரிவித்துள்ளார்.