பெண்ணிடம் இருந்து 7 இலட்சம் கொள்ளை

233 0

வீரவில – சின்ன பாலம் பகுதியில் பெண்ணொருவரிடம் இருந்து சுமார் ஏழு இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இதனைச் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் நிதி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரே சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் வசம் இருந்து ஏழு இலட்சத்து 12,335 ரூபாய் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைதுசெய்ய வீரவில பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.