காஷ்மீரில் சில மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்வு

403 0

iகாஷ்மீரில் 4 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 8ஆம் திகதி ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த புர்ஹான் வானி, பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதனைக் கண்டித்து காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்காரணமாக இதுவரை 45 பேர் பலியாகியுள்ளனர்.
கலவரங்களைக் கட்டுப்படுத்த மாநிலத்தில் பரவலாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது.
இந்தநிலையில் நேற்று பந்திப்பூரா, பாரமுல்லா, புட்காம், கண்டர்பால் ஆகிய 4 மாவட்டங்களிலும் தலைநகர் ஸ்ரீநகரில் சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் அனந்தநாக், குல்காம், குப்வாரா, புல்வாமா, சோபியான் மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது.