வெள்ளவத்தையில் பொலிஸார் அராஜகம்: கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன்

96 0

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் பொலிஸார் குழுவொன்று அராஜகமான முறையில் இளைஞரொருவரை தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் (21.01.2024) இடம்பெற்றுள்ளது.

வெள்ளவத்தை பசல் பேட்ஸ் வீதிக்கு எதிர்புறத்தில் இருந்து வந்த பொலிஸார் குழுவொன்று அந்த சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரை அகற்றும்படி உரிமையாளரான கோவில் பூசகர் ஒருவரிடம் முறையற்ற வார்த்தைகளை பிரயோகித்துள்ளனர்.இதன்போது அங்கு வந்த பூசகரின் மகன் பொலிஸாரிடம் இது தொடர்பில் வினவியமைக்கு, ஆத்திரமடைந்த பொலிஸ் அதிகாரிகள், அந்த இளைஞரை கொடூரமாக தாக்கி முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்றதாக  தகவல் வெளியாகியுள்ளது.