கிழக்கு மாகாண நூலகமொன்றிற்கு 1000 தமிழ் நூல்கள் அன்பளிப்பு

108 0

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள கோட்டைக்கல்லாறு எனும் கிராமத்தில் இயங்கும் நூலகத்திற்கு, இனிய நந்தவனம் அமைப்பின் ஊடாக தமிழ் நூல்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

சுவிஸ் தமிழ் இலக்கியச் சங்கத் தலைவர் கல்லாறு சதீஷின் வேண்டுகோளிற்கிணங்க வருகை தந்த இனிய நந்தவனம் ஆசிரியர் சந்திரசேகரம்  இந்த நூலகத்திற்கு அன்பளிப்பாக  1000 தமிழ் நூல்களை வழங்கியுள்ளார்.

இதன்போது புலம்பெயர் படைப்பாளிகள், மலேசியப் படைப்பாளர்கள் உட்பட பலர் எழுதிய பெறுமதி மிக்க நூல்களே அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

சுமார் 2 இலட்சம் இந்திய ரூபாய்கள் பெறுமதியான இந்த நூல்களைத் திருச்சியிலிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கும் பணியினையும் நந்தவனம் சந்திரசேகரன் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.