வைத்தியரைத் தாக்கிய ஊழியர்கள் மூவர் கைது

68 0

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணர் கிரிஷாந்த பெரேராவை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் ஒரு பெண் உட்பட மூன்று வைத்தியசாலை ஊழியர்களை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஜனவரி 17ஆம் திகதி காலி பொலிஸில் வைத்தியர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, 52 வயதுடைய பெண் சுகாதார உதவியாளர் ஒருவரும், 45 மற்றும் 43 வயதுடைய உதவியாளர்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை வைத்தியசாலை வளாகத்தில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சூழ்நிலையின் போது பெண் வைத்தியசாலை ஊழியர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் Onco சத்திரசிகிச்சை நிபுணர் காலி நீதவான் நீதிமன்றினால் கைது செய்யப்பட்டு ஜனவரி 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.