மாவீரர்நினைவு சுமந்த உதைபந்தாட்டப்போட்டி – பிரான்சு

310 0

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழர் விளையாட்டுத்துறையினர் மாவீரர் நினைவு சுமந்து நடாத்திய உதைபந்தாட்டப்போட்டி – 2017 இன் மூன்றாம் நாள் போட்டிகள் 02.04.2017 ஞாயிற்றுக்கிழமை செவரோன் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றன.

ஆரம்ப நிகழ்வாக ஈகைச்சுடரினை 03.12.2007 அன்று கரிப்பட்டி முறிப்பில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட வீர வேங்கை யாழ்நம்பியின் சகோதரி அவர்கள் ஏற்றிவைத்தார் .
அகவணக்கத்தை தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின , போட்டியில் விண்மீன்கள் விளையாட்டுக் கழகம் , நல்லூர் ஸ்தான் விளையாட்டுக் கழகம் , தமிழர் விளையாட்டுக் கழகம் 93 , அரியாலை ஐக்கிய கழகம் ஆகியன பங்கு பற்றிச் சிறப்பித்திருந்தன. போட்டிகள் யாவும் வீரர்களின் உற்சாகத்துடனும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றன.