பிரான்சில் இடம்பெற்ற எமது நிலம் எமக்குவேண்டும் எழுச்சிப் போராட்டம்!

349 0

எமது நிலம் எமக்கு வேண்டும் எழுச்சிப்போராட்டம் பிரான்சில் இன்று (02.04.2017) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிமுதல் 17.00 மணிவரை பிரான்சு Place de la Bastille பகுதியில் இடம்பெற்றது.
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழீழ மக்கள் பேரவை ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் பலரும் பதாகைகள், பதாதைகள், தமிழீழத் தேசியக்கொடி என்பவற்றைத் தாங்கியிருந்தனர்.

பிரெஞ்சுமொழி, ஆங்கிலமொழியில் குறித்த போராட்டத்தின் நோக்கம் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டதுடன், பிரெஞ்சுமொழி, ஆங்கிலமொழியிலான துண்டப்பிரசுரங்கஞம் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
வெளிநாட்டவர்கள் பலரும் எமது போராட்டத்தின் நோக்கிம்பற்றி அறிந்துசென்றதைக் காணமுடிந்தது.
நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலைத் தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் நிகழ்வுடன் நிகழ்வு நிறைவுகண்டது.

(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)