யாழில் வாள்வெட்டு இருவர் படுகாயம்

273 0

சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற தகராறுகள் பின்னர் வாள் வெட்டாக சாவகச்சேரி மட்டுவில் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற தகராறுகள் பின்னர் வாள் வெட்டாக மாற்றமடைந்துள்ளது. இச் சம்பபவம் நேற்று இரவு 7:40 மணியளவில் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அருகில் இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் இரு இளைஞர்கள் படுயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிசாரால் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்