மும்பையில் தாவூத் இப்ராஹிம் சிறு வயதில் வாழ்ந்த வீடு உள்ளிட்ட 4 சொத்துக்கள் ஏலம்

62 0
image
மும்பை: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சிறு வயதில் வாழ்ந்த ரத்னகிரியில் உள்ள வீடு உட்பட நான்கு சொத்துகள் நேற்று ஏலத்தில் விடப்பட்டன.

1993-ல் நடத்தப்பட்ட மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தாவூத் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அதன் பின் இவர் இந்தியாவை விட்டு தப்பியோடி தலைமறைவாக உள்ளார்.

இந்த நிலையில், மும்பை ரத்னகிரியில் அவர் சிறுவயதில் வாழ்ந்த வீடு உட்பட தாவூத் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான நான்கு சொத்துகள் நேற்று ஏலத்தில் விடப்பட்டன. மொத்தம் உள்ள இந்த நான்கு சொத்துகளில் இரண்டு சொத்துகள் முறையே ரூ.2.01 கோடி மற்றும் ரூ.3.28 லட்சத்துக்கு ஏலம் போனது. 170.98 சதுர மீட்டர் அளவுள்ள விவசாய நிலம் அதிகபட்சமாக ரூ.2.01 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.