கொழும்பில் நாளை விசேட போக்குவரத்துத் திட்டம்

63 0
கொழும்பில் நாளை ஞாயிற்றுக்கிழமை (31) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று சனிக்கிழமை (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்தார்.

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு நாளைய தினம் கொழும்பு நகரில் ஏற்படக்கூடிய வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாலை 5 மணி முதல் இந்த போக்குவரத்து திட்டம் காலிமுகத்திடல் உள்ளிட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.