இதன்போது இலங்கை – இந்திய நட்புறவை மேம்படுத்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
அதற்கு இந்திய உயர்ஸ்தானிகர், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு ஒருபோதும் மாற்றமடையாது என கூறியமை குறிப்பிடத்தக்கது.