பாகிஸ்தான் கடற்படையால் குஜராத் மீனவர்கள் 12 பேர் கைது

277 0

அரபிக் கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய மற்றும் பாகிஸ்தான் மீனவர்கள் இருநாட்டு கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அரபிக் கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த மீனவர்கள் 12 பேர் பாகிஸ்தான்  கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களது 2 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பாகிஸ்தான் இந்திய மீனவர்கள் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலின் சர்வதேச எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 230 இந்திய மீனவர்கள் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 40 படகுகளும் சிறை பிடிக்கப்பட்டுள்ளது.