ஆர்.கே.நகர் தொகுதியில் விஜயகாந்த் பிரசாரம் செய்வாரா?

258 0

ஆர்.கே.நகர் தொகுதியில் விஜயகாந்த் பிரசாரம் செய்வாரா? என்ற நிருபர்களின் கேள்விக்கு தே.மு.தி.க. பொருளாளர் இளங்கோவன் பதில் அளித்தார்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து கட்சியின் பொருளாளர் இளங்கோவன் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உடல்நலக் குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று மாலை வீடு திரும்புவார். தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த், இளைஞரணி தலைவர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் ஏப்ரல் 3-ந் தேதி முதல் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.

விஜயகாந்த் நிச்சயம் பிரசாரம் செய்வார். அவருடைய பிரசார திட்டம் இன்னும் முடிவாகவில்லை. இறுதிக்கட்டத்தில் அவரது பிரசாரம் இருக்கும்.நாங்கள் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றால் தொகுதி மேம்பாட்டு நிதி மட்டுமின்றி எங்களது சொந்த பணத்திலும் திட்டங்களை நிறைவேற்றுவோம். ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று முன்தினம் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற கூட்டத்தில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதற்கான வீடியோ ஆதாரம் எங்களிடம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.