தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராடிய படையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை

303 0

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராடிய படையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன், சர்வதேச அழுத்தங்களில் இருந்து படையினரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சினைகளுக்கு துரித கதியில் தீர்வு வழங்க அரசாங்கம் முயற்சித்து வருவதாகவும் வேறும் தரப்பினர் தலையீடு செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளிலிருந்து எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் ஜனநாயகம் மற்றும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் படையினரை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.