அனைத்துப் பீடங்களையும் முடக்குவோம் – யாழ் பல்கலை மாணவர்கள் எச்சரிக்கை

316 0

வகுப்புத் தடை விதிக்கப்பட்ட 13 மாணவர்களையும் எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மீள இணைக்காவிடின், அனைத்துப் பீடங்களையும் முடக்குவோம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் நேற்று காலை, பல்கலைக்கழகத்தில், கறுப்புதுணியால் வாய்மூடி அமைதியான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கலைப்பீட மாணவர்கள் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்ததுடன், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக தமது கண்டனத்தினையும் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் போது இடம்பெற்ற அசம்பாதவிதத்தின் பின்னர் கலைப்பீட மாணவர்கள் 13 பேருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டதுடன், கலைப்பீடமும் துணை வேந்தரினால் கலைக்கப்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் உறுதியான முடிவு கிடைக்காவிடின் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பூரண ஆதரவுடன் அனைத்து பீடங்களையும் முடக்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.