பரீட்சையில் சித்தி இல்லை – இரு மாணவர்கள் தற்கொலை

260 0

2016ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாத காரணத்தினால் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்வி பொதுதராதர சாதாரண தரத்திற்கான பெறுபேறுகள் கடந்த தினத்தில் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் பரீட்சையில் தோல்வியடைந்த காரணத்தினால் இரு வேறு பகுதிகளில் உள்ள மாணவனும் மாணவியும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ராகம பகுதியில் தொடரூந்து முன் பாய்ந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கணித பாடத்தில் சித்தியடையாதமையால் இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஹோமாகம பகுதியில் மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.