எதிர்காலத்தில் காங்கேசன்துறை துறைமுகத்தில் எரிபொருளை தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கனிய எண்ணெய் வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் கனிய எண்ணெய் விநியோக மத்திய நிலையத்தை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ள காணியை நேற்று பார்வையிட்தன் பின்னரே ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது அநுராதரபுரத்தில் இருந்து கொள்கலன் ஊடாக வட பகுதிக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.
சிலவேளைகளில், கொழும்பிலிருந்து கொள்கலன் ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.
இதற்கான விநியோக செலவு அதிகமாகும்.
இந்த நிலையில், காங்கேசன்துறை துறைமுகத்தில் எரிபொருளை தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.