தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க தீர்மானிக்கப்படவில்லை – இலங்கை

254 0

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க தீர்மானிக்கப்படவில்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடற்றொழில்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 130 தமிழக மீனவ படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இவை கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டவை.

இவற்றை விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

எனினும் இதில் உண்மையில்லை என்று அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.