சிறுவர் மரணத்தை ஏற்படுத்துபவரிகளிடமிருந்து நட்டஈட்டை அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஒருவரின் கவனயீனத்தினால் மரணமடைகின்ற சிறு வயதுடையவர்களின் பெற்றோர்களின் உளவியல் ரீதியான துன்பங்களை கவனத்திற் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த செயலில் ஈடுபடுபவர்;களிடமிருந்து நட்ட ஈட்டு தொகையொன்றை அறவிடுவதற்கு ஏதுவான வகையில் சட்டம் ஒன்றை தயாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்காக சட்ட வரைஞர் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்குவது தொடர்பில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.