கடந்த ஆட்சியில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் – அமைச்சரவை உப குழு நியமிக்க நடவடிக்கை

269 0

கடந்த ஆட்சியின்போது பாதிப்புக்கு உள்ளான ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இது குறித்து முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை பாதிப்புக்கு உள்ளான ஊடகவியலாளர்கள் தொடர்பில் தகவல்கள் தேடியறிவதற்கு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய குழுவொன்று நியமிக்கப்பட்டது.

பாதிப்புக்கு உள்ளான ஊடகவியலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக இந்தக் குழுவினால் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

அந்த பரிந்துரைகளை மேலும் ஆராய்வதற்காக அமைச்சர்களான மங்கள சமரவீர, விஜேதாஸ ராஜபக்ஷ, கயந்த கருணாதிலக ஆகியோரை உள்ளடக்கிய அமைச்சரவை உப குழுவொன்றை நியமிக்கப்பட உள்ளது.