யாழ். மாவட்டத்திற்கு ஒரு நாடாளுமன்ற ஆசனம் அதிகரிப்பு

257 0

அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் மாவட்டங்களுக்கான ஆசன ஒதுக்கீட்டில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தேர்தல்கள் செயலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமை 9 ஆசனங்களைக் கொண்டிருந்த பதுளை மாவட்டத்துக்கு ஒரு ஆசனம் குறைக்கப்பட்டு 8 ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, 6 ஆசனங்களைக் கொண்டிருந்த யாழ்ப்பாண மாவட்டத்துக்கு ஒரு ஆசனம் அதிகரிக்கப்பட்டு 7 ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

2016ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு அட்டையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, வேறு எந்த மாவட்டங்களுக்கான ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.