தங்காலையில் விசேட அதிரடிப்படையினரால் ஆயுதங்களுடன் ஒருவர் கைது!

97 0

விசேட அதிரடிப்படையின் தங்காலை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  வலஸ்முல்ல, யஹல்முல்ல பிரதேசத்தில் வசிக்கும் 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஆவார்.

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களையும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு,  கைத்துப்பாக்கியையும் வைத்திருந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டார்.

இவர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.