கச்சத்தீவை மீட்க போராடுவேன் – தீபாவின் தேர்தல் வாக்குறுதி

240 0

மீனவ சமுதாயத்திற்காக கச்சத்தீவை மீட்க போராடுவேன் என்று ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தீபா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை முன்னிட்டி எம்.ஜி.ஆர்.-அம்மா-தீபா பேரவை சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

அதில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மீனவ சமுதாயத்தின் மீது அதிகமான நம்பிக்கை வைத்திருந்தார்.

அவர் மறைவுக்கு பின் அவரது அரசியல் வாரிசும் எனது அத்தையுமான அம்மா கோட்டையில் சுதந்திர தின கொடியேற்ற பேசும்போது மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று போராடினார்.

அவரது ரத்த வாரிசான நான் அவரது வழியில் மீனவ சமுதாயத்திற்காக கச்சத்தீவை மீட்க போராடுவேன்.

மீனவர்களுக்கு மானிய விலையில் படகுகள், உபகரணங்கள் வாங்கி தருவேன்.

ஜெயலலிதா மரணம் குறித்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகத்தை வெளிப்படுத்திட சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தீபா தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.