பலத்த மழையினால் வத்தேகம பாடசலையின் சுவர் இடிந்து வீழ்ந்தது

89 0

பலத்த மழை காரணமாக வத்தேகம பாலிகா கல்லூரியின் ஆரம்பப் பிரிவுக்கு அருகாமையில் பெரிய பக்கச்சுவர் ஒன்று  இடிந்து வீழ்ந்துள்ளது.

இதனையடுத்து பாடசாலை வளாகத்தை துப்புரவு செய்யும் பணியை இராணுவத்தினர் மேற்கொண்டுள்ளதுடன், மாகாண கல்வி திணைக்களத்தின் பணிப்புரையின் பேரில் இன்றும் (21) நாளையும் (22) பாடசாலையை மூடுவதற்கும் பாடசாலை அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்தச் சுவர் இடிந்து வீழ்ந்ததால் பாடசாலையின் கட்டிட வளாகமும் சேதமடைந்துள்ளதால், எதிர்காலத்தில் ஆபத்துகள் ஏற்படுமா என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேரில் ஆய்வு நடத்தவுள்ளது.

வத்தேகம பிரதேசத்தில் நேற்று (20) பிற்பகல் முதல் கடும் மழை பெய்து வருவதுடன் பாடசாலையின் பல கட்டிடங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.