பத்தரமுல்லையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது

78 0

தலங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பத்தரமுல்லை பிரதேசத்தில்  ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர்  பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பின்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 25 வயது இளைஞராவார்.

தலங்கம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சோதனையில் 10 கிராம் 600 மில்லிகிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.