உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் நட்டஈடு : மைத்திரி, பூஜித உள்ளிட்டோர் வைப்பிலிட்ட தொகை !

94 0

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்  நட்டஈடு செலுத்தல் தொடர்பில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இன்று பாராளுமன்றில் கருத்துத் தெரிவித்தார்.

மைத்திரிபால சிறிசேன, பூஜித ஜயசுந்தர, நிலந்த ஜயவர்தன,ஹேமசிறி பெர்னாண்டோ, சிசிர மென்டிஸ், ஆகியோர் இழப்பீட்டு  அலுவலக நிதிய கணக்கில் 3 கோடியே 68 இலட்சத்து 25 ஆயிரத்து 88 சதம் ரூபா வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, முழுமையாக தொகை வைப்பிலிடப்பட்டதும் பாதிக்கப்பட்டோருக்கு நீதிமன்றத்தின் கண்காணிப்புடன் நட்டஈடு செலுத்தப்படும் என்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.