ஹோமாகம நீதிமன்றின் மின்னல் கடத்தியின் 45 அடி நீள செப்புக் கம்பி திருட்டு!

102 0

ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் பொருத்தப்பட்டுள்ள மின்னல் கடத்தியின் 45 அடி நீள செப்புக் கம்பியை  அறுத்து திருடிச் சென்றுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் நீதிமன்ற பதிவாளர் ஹோமாகம தலைமையக பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திருட்டு எப்போது நடந்தது என்பது இன்னும் சரியாக தெரியவில்லை.