ஒழுக்கமற்ற வகையில் நடந்து கொண்ட பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் இடைநிறுத்தம்!

49 0

கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை  குளியலறைக்கு வரவழைத்து ஒழுக்கமற்ற வகையில் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில்  பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

மற்றொரு பொலிஸ் கான்ஸ்டபிள் இந்த கான்ஸ்டபிளையும் பயிற்சி கான்ஸ்டபிளையும் குளியலறையில் பார்த்து இது குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக களனி பொலிஸ் அத்தியட்சகர் மேற்கொண்ட விசாரணையையடுத்து நேற்று (13) முதல் இந்த பணித்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.