பொல்பித்திகமவில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

45 0

பொல்பித்திகம – மகுல்பொத பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி நபர் ஒருவர் நேற்று (13) காலை உயிரிழந்துள்ளதாக பொல்பித்திகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் பொல்பித்திகம, மகுல்பொத பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார்.

இவர் மின்சாரத்தால் தாக்கப்பட்ட நிலையில் பொல்பித்திகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் தனது பண்ணையில் காட்டு மிருகங்களால் ஏற்படும் சேதங்களை கட்டுப்படுத்துவதற்காக பொருத்தப்பட்டிருந்த மின் கம்பியில் சிக்கியே உயிரிழந்துள்ளதாக பொல்பிதிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.