சனல் 4 குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்டமா அதிபர் விசாரணைகளை மேற்கொள்கிறார் – நீதி அமைச்சர்

60 0

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சனல் 4 முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்டமா அதிபர் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.சனல் 4 அறிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சட்டமா அதிபர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார். எனினும் தெரிவுக் குழுவொன்றை நியமிப்பது தொடர்பான அபிவிருத்திகள் குறித்து தெரியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமியின் வாய்மூல கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் .இதனை தெரிவித்துள்ளார்.