மேல் மாகாணத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

75 0

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்திற்குட்பட்ட மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.