இலங்கை – மலேசியாவுக்கு இடையில் ஈ-வீசா

358 0

zahidhamidi5_0இலங்கையின் சுற்றுலா பயணிகளுக்கான சுற்றுலா ஈ-வீசாவுக்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
எனினும் எதிர்வரும் நெவம்பர் முதல் இது நடைமுறைக்கு வரும் என்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்த மலேசிய உதவிப்பிரதமர் அஹ்மட் ஷாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் எதிர்வரும் நெவம்பரில் நடைபெறவுள்ள சர்வதேச இஸ்லாமிய மாநாட்டின்போது தாமும் மலேசியாவின் பிரதமரும் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிட்ட அவர், அதன்போது ஈ-வீசா உடன்படிக்கை செய்துக்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் அடிப்படையில் இலங்கையின் அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்க மலேசியா முன்வந்துள்ளது என்றும் உதவி பிரதமர் அஹ்மட் ஷாஹிட் ஹமிடி  தெரிவித்துள்ளார்.