ஜெர்மன் முனிச் நகரில் தீவிரவாத தாக்குதல் – 9 பேர் பலி

363 0

Pathankot_Air_base_2680346fஜெர்மன் முனிச் நகரின் வர்த்தக தொகுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 9 பேர் கொல்லட்டனர்.
சம்பவத்தில் 10 பேர் வரையில் காயமடைந்தனர்.
மூன்று ஆயுத தாரிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டதாகவும் அதில் ஒருவர் தற்கொலை செய்து கெண்டுள்ளதாகவும் அந்த நாட்டு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
பிந்தி கிடைத்த தகவலின் படி, ஒருவரே தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து ஜெர்மனின் எல்லையில் அமைந்துள்ள செக் குடியரசின் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.