காணாமல் போன இந்திய வானூர்தி தொடர்ந்தும் தேடப்படுகின்றது.

400 0

cgகாணாமல் போயுள்ள, இந்திய வான்படைக்கு சொந்தமான வானூதியை தேடும் பணிகள் தொடர்கின்றன.
சென்னை வானூர்தி தளத்தில் இருந்து 29 பேருடன் புறப்பட்ட வானூர்தியே நேற்று இவ்வாறு காணாமல் போனது.
சென்னை தாம்பரம் வானூரத்தி தளத்தில் இருந்து  புறப்பட்ட ஏ.என் ரக வானூரதி அந்தமான தீவில் உள்ள போர்ட் பிலயர் (Port Blair) ரை சென்றடையவிருந்தது.
சென்னையில் இருந்து புறப்பட்டு 15 நிமிடங்களின் பின்னர் வானூர்தியுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் வானூர்தி காணாமல் போனது.
இந்த நிலையில், காணாமல் போன இந்த வானூர்தியை தேடும் பணியில் கடற்படையினரும் கரையோர காவல் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
இதன்பொருட்டு 4 வானூர்திகள், 12 கப்பல்கள் மற்றும் ஒரு நீர்மூழ்கி கப்பலுக்கு தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.