காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு இல்லை – திருகோணமலை கிராம சேவையளர்கள் தீர்மானம்

435 0

vavunaகாவல்துறையினரின் கடமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் இருந்து விலகி இருக்க திருகோணமலை மாவட்ட கிராம சேவையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதேசத்தின் கிராம சேவையாளர் ஒருவர் மீது அடிப்படையற்ற வகையில் குற்றம் சுமத்தி, நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிராகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இலங்கை கிராம சேவையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்தன இது தொடர்பில் கருத்து தெரிவித்தார்.
வெருகல் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற சாதாரண முறைப்பாட்டின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்றும்  அவர் குறிப்பிட்டார்.