மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் – பிரஜைகள் அமைப்பு

391 0

milk1ஐந்து வருடங்களுக்கு நீடிக்கப்பட்ட தேசிய அரசாங்கம், மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரஜைகள் அமைப்பு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
அமைப்பின் இணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய, கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இதனை தெரிவித்தார்.
ஒன்றிணைந்த எதிர்கட்சி, தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க பாதையாத்திரை முதல் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிலையில், நல்லாட்சி அரசாங்கம் தமது ஆயுட் காலத்தை 5 வருடங்களுக்கு நீடித்துக் கொண்டுள்ளது.
ஐந்து வருடங்களுக்கு புரிந்துணர்வை ஏற்படுத்தி கொண்டமை குறித்து கவலையில்லை.
என்றாலும் 5 வருடத்தில் மக்கள் எதிர்பார்க்கும் அபிலாஷைகளை நிறைவேற்றுங்கள்.
மோசடி செய்தவர்களை விரைவில் கைது செய்யுங்கள் என்பதே தங்கள்  கோரிக்கையாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.