பேராதெனிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்பு தடை

347 0

University-of-Peradeniyaஉடன் அமுலுக்கு வரும் வகையில் பேராதெனிய பல்கலைக்கழக மாணவர்கள் 17 பேருக்கு வகுப்பு தடை விதிக்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
விஞ்ஞானம், பொறியியல் மற்றும் முகாமைத்துவ பீடங்களின் மாணவர்கள் இவ்வாறு வகுப்பு தடைக்கு உட்பட்டுள்ளனர்.
கடந்த தினத்தில் இடம்பெற்ற சிரமதான பணிகளின்போது, பகிடிவதைக்கு ஆதரவாகவும் எதிராகவும் மாணவ குழுக்களுக்கு இடையே, மோதல் ஏற்பட்டது.
மோதலில் 5 பேர் காயமடைந்தனர்.
இது தொடர்பில், பல்கலைக்கழக ஒழுக்க நிர்வாக பிரிவு பேராசிரியர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களுக்கு அமைய இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.