சுகாதார நெருக்கடியை தீர்க்க பொது இணக்கம்

56 0

நாட்டில் நிலவும் சுகாதார நெருக்கடி தொடர்பில் தலையிட்டு செயற்படுவதற்கு பாராளுமன்றத்தில் உள்ள ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் தமது பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று (18) விசேட கலந்துரையாடலை நடத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அங்கு பல இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண குறிப்பிட்டுள்ளார்.