அரச கணக்குகள் பற்றிய குழு உருவாக்கப்பட்டு 100 ஆண்டுகள் பூர்த்தி

82 0

அரச கணக்குகள் பற்றிய குழு உருவாக்கப்பட்டு இன்றுடன் 100 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

இது தொடர்பில்இ நாடாளுமன்றில் இன்றைய தினம் சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட முதலாவது நிதி கண்காணிப்புக் குழுவாக அரச கணக்குகள் பற்றிய குழு கருதப்படுகிறது.

ஐ.ஆர்.தம்பிமுத்துவினால் சட்டவாக்கப் பேரவையில் 1921ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முன்வைத்த பிரேரணைக்கு அமைய அரச கணக்குகள் பற்றிய குழு அமைக்கப்பட்டது.