வெள்ளத்தில் மூழ்கிய பண்டாரவளை!

145 0

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக கொழும்பு – பதுளை பிரதான வீதியும் தடைப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் சுமார் 04 அடிக்கு மேல் நீர் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடைந்து வீடு திரும்பும் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.