புத்தளத்தில் வலையில் சிக்கி உயிரிழந்த புள்ளிச்சுறா கரையொதுங்கியது

159 0

புத்தளம் கங்கைவாடி கலப்புப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (10) காலை புள்ளிச்சுறா மீனொன்று உயிரிழந்த நிலையில் கரையொதிங்கியுள்ளது.

குறித்த சுறா மீன் வலையில் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் யொதிங்கியதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

குறித்த புள்ளிச்சுறா மீன் சுமார் 25 அடி நீளமுடையது எனவும் 2000 கிலோ கிராம் எடைக் கொண்டு காணப்படுவதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்த சுறா மீனினை பிரேத பரிசோதனைக்கு உற்படுத்தப்பட உள்ளதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.