கொரோனா வைரஸை விட வீரியமான புதிய வைரஸ் தோற்றம்

139 0

கொரோனா வைரஸை தொடர்ந்து எக்ஸ் வைரஸ் உலக நாடுகளை அடுத்து அச்சுறுத்தும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இது வீரியம் மிக்க வைரஸாக இருக்கும் சூழலில் இதற்கு எக்ஸ் என்ற கற்பனை பெயரை உலக சுகாதார நிறுவனம் வைத்துள்ளது.

புதிதாக கண்டறியப்பட்டுள்ள வைரஸ் கொரோனா வைரஸை விட கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த எக்ஸ் வைரஸ் குறித்து மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், அதை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுக்காவிட்டால் பாதிப்பு மிக கடுமையாக இருக்கும் எனவும் பிரபல மருத்துவ வல்லுனர் வைத்தியர் என்.கே.அரோரா கூறியுள்ளார்.