மண்சரிவு அபாய எச்சரிக்கை

157 0

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இதற்கான சிவப்பு அச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தில் எல்பிட்டிய மற்றும் நாகொட பகுதிகளுக்கும், களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, வல்லாவிட்ட மற்றும் மத்துகம பகுதிகளுக்கும், மாத்தறை மாவட்டத்தின் பிடபெத்தர பகுதிக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட பகுதிக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.