கோட்டாவின் தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க கால அவகாசம்!

58 0

போராட்டத்தின்போது நாடளாவிய ரீதியில் அவசர  நிலைமையை  அமுல்படுத்துவதற்கு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ  மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் இன்று (05) கால அவகாசம் வழங்கியுள்ளது.

அதன்படி, இன்று முதல் எட்டு வாரங்களுக்குள் உரிய ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.