இ.போ.ச. பஸ்ஸின் நடத்துனரை தாக்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரத்தையும் சேதப்படுத்திய இருவர்!

96 0

அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றின் நடத்துனரை கெக்கிராவ பொது விளையாட்டு மைதானத்துக்கு அருகில் வைத்து மறித்து  தாக்கிய இருவர் பயணச்சீட்டு வழங்கும்  இயந்திரத்தையும் சேதப்படுத்தியதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சம்பவ இடத்துக்குச் சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேக நபர்களைக் கைது செய்ய முற்பட்டபோது சந்தேக நபர்கள் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த பஸ் அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றபோது கெக்கிராவ பொது மைதானத்துக்கு  அருகில் வந்த இருவர், பஸ்ஸை மறித்து  நடத்துனரை தாக்கி, அவரிடமிருந்த   பயணச்சீட்டு இயந்திரத்தை சேதப்படுத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், சந்தேக நபர் ஒருவர் மறுநாள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.