சட்டவிரோதமாக தகவல் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்த மூவர் விமான நிலையத்தில் கைது

86 0

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட  தகவல் தொடர்பு சாதனங்களுடன் மூவர் கட்டுநாயக்க  விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் 22, 27 மற்றும் 46 வயதுடைய கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்ட போது கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் வாகனம்  சோதனைக்குட்படுத்தப்பட்டதை அடுத்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுடன் குறித்த குழுவினர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து 09 மடிக்கணினிகள், 121 கையடக்க தொலைபேசிகள், 100 சிறிய கையடக்க தொலைபேசிகள், 240 சார்ஜர்கள், தொலைபேசி பேட்டரிகள் மற்றும் போன் கவர்கள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.